விஐடி சென்னை, வேலூர், போபால், அமராவதி ஆகிய இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக விஐடி துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை வழங்கி மாணவர் சேர்க்கையை அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை துணை வேந்தர் என்.சம்பந்தம், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், உதவி இயக்குநர் டி.பழனி ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.