காஞ்சிபுரம்

கணினி அறிவியல் தேசியக் கருத்தரங்கு

தினமணி

சங்கரா பல்கலைக்கழக கணினி அறிவியில் துறை சார்பில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.
 காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகம் - கணினி அறிவியல் பயன்பாட்டுத் துறை சார்பில் தேசிய அளவிலான "எலைட்-2018' தொழில்நுட்பக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை, பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீனிவாசு, பல்கலைக்கழக டீன் எஸ்.பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர். துறைத் தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிடிஎஸ் நிறுவன நிர்வாகி எம்.எஸ்.ராகேஷ் சிறப்புரையாற்றினார். அதோடு, தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பக் கல்வித் துறை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிறைவாக, விஐடி பல்கலைக்கழக பேராசிரியர் எம்.பிரசன்னா மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இக்கருத்தரங்கை, மாணவர்கள் பிரசாந்த், குணசேகர், தனசேகர், யுவஸ்ரீ, அஸ்வதி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். துறை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் நன்றியுரையாற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT