காஞ்சிபுரம்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

DIN


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 56ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெங்காடு பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 56ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட கிறிஸ்து பேரவை துணை அமைப்பாளர் தேவராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு, மாவட்டத் தொழிலாளர் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் நெமிலி மாதவன், ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியப் பொருளாளர்கள் மூங்கிலான், விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் நெமிலி சி.கோ.தியாகாஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெங்காடு ஊராட்சியைச் சேர்ந்த 500 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளையும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்றுசக்கர சைக்கிளையும் வழங்கினார். சுமார் ஆயிரம் பேருக்கு அன்ன தானம் செய்யப்பட்டது. இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கச்சிப்பட்டு பழனி, சுடர்வளவன், தினகரன், தேவேந்திரன், ரமேஷ், ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT