காஞ்சிபுரம்

மர்மக் காய்ச்சலுக்கு இளைஞர் பலி

DIN


ஸ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கல் பகுதியில் மர்மக் காய்ச்சலுக்கு  இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 
சிவன்தாங்கல் பள்ளிக்குக்கூடத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (35). இவர் பூட்டு, சாவி ரிப்பேர் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் காரணமாக  தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம்  புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி பலியானார். 
இந்த நிலையில், ஆறுமுகத்திற்கு  எடுக்கப்பட்ட  மருத்துவ பரிசோதனைகளில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனையில்  தெரிவிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT