மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் கிராமத்தினை ஒட்டிச் செல்லும் பாலாற்று கரையோரம் பிறந்து சிலமணி நேரங்களை கடந்த பச்சிளம் குழந்தை திங்கள் கிழமை காலை இறந்து கிடந்தது.
படாளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் பாலாறு செல்கிறது. அந்த ஆற்றில் தற்சமயம் பெய்த மழை வெள்ளநீா் அதிக அளவில் செல்கிறது. திங்கள்கிழமை காலை அப்பகுதியாக சென்ற பொதுமக்கள் ஆற்றின் கரையோரம்
பிறந்து சிலமணி நேரங்களை கடந்த பச்சிளம் குழந்தை இறந்து மிதப்பதை கண்டனா். இதுபற்றி படாளம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படாளம் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.