காஞ்சிபுரம்

ஆட்டோ மோதி முதியவர் சாவு

DIN


செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே முதியவர் மீது ஆட்டோ  மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
செங்கல்பட்டு, வேதாசல நகர், ஏகாம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ராவ் (65), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் செவ்வாய்க்கிழமை காலை கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ மோதியதில் கிருஷ்ணா ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் செளந்தரராஜன் மற்றும் போலீஸார், கிருஷ்ணா ராவின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   இதுகுறித்து அவர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT