காஞ்சிபுரம்

மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது

DIN


சுங்குவார்சத்திரம் பகுதியில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 சுங்குவார்சத்திரத்தை அடுத்த பள்ளமொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (38). அவரது மனைவி ஆதிலட்சுமி (35). கந்தன், தினமும் மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்லாமல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் ஆதிலட்சுமி தென்னேரி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வேலைக்காக மொளச்சூர் பகுதிக்கு வந்த ஆதிலட்சுமியை வீட்டுக்கு வருமாறு கந்தன் அழைத்துள்ளார். இதற்கு ஆதிலட்சுமி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கந்தன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆதிலட்சுமியை வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கந்தனை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT