காஞ்சிபுரம்

வேதகிரீஸ்வரர் கோயிலில் நாளை தெப்போற்சவம்

DIN

 திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயிலின் சங்குதீர்த்தக் குளத்தில் திங்கள்கிழமை (21ஆம் தேதி) மாலையும், தாழக்கோயில் ரிஷப தீர்த்தக் குளத்தில் செவ்வாய்க்கிழமை (22ஆம் தேதி) மாலையும் தெப்போற்சவம் நடைபெற உள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் ருத்திரகோடி பட்சி தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. இக்கோயில் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறப்பதாக ஐதீகம். எனவே இது சங்கு தீர்த்தக்குளம் என்ற பெயரில் வழஙக்கப்படுகிறது. இக்குளத்தில் தைப்பூச நாளான வரும் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 6.30 மணிக்கு தெப்போற்சவம் நடைபெற உள்ளது. அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு தாழக்கோயிலில் உள்ள ரிஷப தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா, மின் அலங்காரம், வாண வேடிக்கை, விசேஷ மேளக் கச்சேரியுடன் நடைபெறவுள்ளது.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் எம்.சக்திவேல், செயல் அலுவலர் ஆ.குமரன், கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT