காஞ்சிபுரம்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

DIN


சோமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்லிடப்பேசிகளை வழிப்பறி செய்து வந்த இருவரை சோமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
சோமங்கலம் போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச்சாலை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீஸாரைக் கண்டதும்  தப்பியோட முயற்சித்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ரபீக் (29), குரோம்பேட்டையைச் சேர்ந்த சேகர் (29) என்பதும், இவர்கள் இருவரும் வண்டலூர்- வெளிவட்டச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் செல்லிடப்பேசிகளை வழிப்பறி செய்து வந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த சோமங்கலம் போலீஸார் அவர்களிடம் இருந்து 3 செல்லிடப்பேசிகளை  பறிமுதல்  செய்தனர். இருவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT