காஞ்சிபுரம்

பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

DIN


செங்கல்பட்டு அருகே மளிகைக் கடை நடத்தும் பெண்ணிடம் தகராறு செய்து, தாக்குதல் நடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
செங்கல்பட்டை அடுத்த பி.வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ராமகனி (44). அவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மதி என்பவரின் மகன் டார்ஜான் (30) ஞாயிற்றுக்கிழமை கடைக்கு வந்து ராமகனியிடம் தண்ணீர் கேன் வாங்கினார். அதற்குப் பணம் கொடுக்குமாறு கேட்டதால், டார்ஜான் தகராறில் ஈடுபட்டதுடன் ராமகனியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், டார்ஜானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT