காஞ்சிபுரம்

இளைஞர் வெட்டிக்கொலை

DIN

செங்கல்பட்டு மேலேரிப்பாக்கம் அருகே 4 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மேலேரிப்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சூர்யா(27) சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தனது நண்பர் கார்த்திக், ஹேமலதா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்வதற்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ஹேமலதாவின் சகோதரர்கள் சந்தோஷ், விக்கி, தாய்மாமன் அழகேசன்ஆகியோர் அண்மையில் சூர்யாவின் வீட்டிற்குச் சென்று தகராறு  செய்தனர். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு செங்கல்பட்டு கக்கன் தெருவில் உள்ள வீட்டில் இருந்த சூர்யாவை நண்பர்கள் மது அருந்த அழைத்தனர். நண்பர்களுடன் அவர் மேலேரிப்பாக்கம் ஏரிக்கரையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போதுஹேமலதாவின் சகோதரர்கள் உள்ளிட்ட 4 பேர் சூர்யாவை சரமாரியாக வெட்டியதில் அவர் அதே இடத்தில் இறந்தார். அவரது சடலத்தை புதரில் வீசிவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.
அப்பகுதி வழியாக திங்கள்கிழமை காலையில் சென்றவர்கள், சூர்யாவின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து செங்கல்பட்டு கிராமிய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்டு கிடந்த சூர்யாவின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு, கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படையை போலீஸார் அமைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT