காஞ்சிபுரம்

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி ஒருவர் பலி

DIN


இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் இறந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஆனம்பாக்கம் கிராமம், பள்ளத்தெரு, மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் கலைச்செல்வன் (33), லோகு (40). அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அரசுப் பேருந்து ஒன்றை முந்தினர்.
அதே நேரத்தில், வாலாஜாபாத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, இருசக்கர வாகனம் மீது பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில், இருசக்கரவாகனத்தை ஓட்டிச் சென்ற கலைச்செல்வன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயங்களுடன் இருந்த லோகுவை அப்பகுதியினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். 
இவ்விபத்து தொடர்பாக வாலாஜாபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT