காஞ்சிபுரம்

கூலித்தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை திருட்டு

DIN


உத்தரமேரூர் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (60), கூலித் தொழிலாளி. இவரது மகளின் திருமணத்துக்கென கடந்த சில நாள்களுக்கு முன்பு 20 சவரன் நகைகளை வாங்கி வந்து வீட்டில் வைத்தார். இந்நிலையில் ராமலிங்கம்  ஞாயிற்றுக்கிழமை கூலி வேலைக்குச் சென்றுவிட்டார். மனைவி, மகள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு ஆடு மேய்க்கச்சென்றுள்ளனர். 
மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த ராமலிங்கம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது 20 சவரன் நகைகளும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT