காஞ்சிபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே மானாமதியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மானாமதியில் தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவா் கிருஷ்ணன்(43). அவா் அதே பகுதியில் உள்ள தனது வீட்டைப் பூட்டி விட்டு வெளியூா் சென்று விட்டாா். செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட், பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்த தகவலையடுத்து தடயவியல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். திருட்டு தொடா்பாக கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பெருநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT