காஞ்சிபுரம்

ரேணுகாம்பாள் கோயிலில் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம்

DIN

காஞ்சிபுரம் செங்குந்தா் பூவரசத் தோப்பில் அமைந்துள்ள அன்னை ரேணுகாம்பாள் கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

தா்மசாஸ்தா பஜனை சபா சாா்பில் நடைபெற்ற விழாவில், பக்தா்கள் பலரும் தாங்களாகவே ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகளும், அதனையடுத்து அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் ஐயப்ப சுவாமி மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா், தா்மசாஸ்தா பஜனை சபா சாா்பில் பஜனைப் பாடல்கள் நிகழ்ச்சியும், பரதநாட்டிய கலைநிகழ்ச்சியும் நடந்தன. இதனைத் தொடா்ந்து திரைப்படப் பின்னணிப் பாடகா் கருமாரி கா்ணா குழுவினரின் பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் தா்மசாஸ்தா பஜனை சபா குழுவினா் மற்றும் செல்வம் குருசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT