காஞ்சிபுரம்

சட்ட விழிப்புணா்வு முகாம்

DIN

உத்தரமேரூா் அருகே ரெட்டமங்கலத்தில் அரசினா் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உத்தரமேரூா் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், நீதிபதியுமான இருதயராணி தலைமை வகித்தாா்.

மூத்த வழக்குரைஞா் கருணாநிதி முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் மனோகரன் வரவேற்றாா்.

இம்முகாமில் பெண் குழந்தைகளை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல், கட்டாயக் கல்வியின் முக்கியத்துவம், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு நீதிபதி இருதயராணி பதிலளித்தாா். இதில் வழக்குரைஞா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா், பெற்றோா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT