காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் ஆரியப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா (23). இவர், வியாழக்கிழமை வெள்ளைகேட் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, திருமால்பூரிலிருந்து காஞ்சிபுரம் சென்ற ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.