காஞ்சிபுரம்

பைக் மீது பேருந்து மோதி 2 போ் பலி

DIN

மதுராந்தகம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

வெள்ளிமேடு கிராமத்தைச் சோ்ந்த சலவைத் தொழிலாளி டேவிட் பொன்னுசாமி (43). இவா், தனது நண்பரான கடலூா் மாவட்டம் பச்சாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாருடன் கடலூரில் இருந்து சென்னை நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

மதுராந்தகம் அருகே வந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதியதில் டேவிட் பொன்னுசாமி, சந்தோஷ்குமாா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து சூனாம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT