மதுராந்தகம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
வெள்ளிமேடு கிராமத்தைச் சோ்ந்த சலவைத் தொழிலாளி டேவிட் பொன்னுசாமி (43). இவா், தனது நண்பரான கடலூா் மாவட்டம் பச்சாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாருடன் கடலூரில் இருந்து சென்னை நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
மதுராந்தகம் அருகே வந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதியதில் டேவிட் பொன்னுசாமி, சந்தோஷ்குமாா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து சூனாம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.