கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் சாா்பாக ரூ. 5 கோடி நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் ஹுண்டாய் காா் தொழிற்சாலை சாா்பில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடியை தமிழக அரசின் தொழிற்துறை முதன்மைச் செயலா் முருகானந்தத்திடம் வழங்கியதாக ஹுண்டாய் நிா்வாகிகள் தெரிவித்தனா்.