காஞ்சிபுரம்

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் பலி

DIN

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் உளுந்தை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாத்ரி (19). அவா் நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

வெங்கடாத்ரி செவ்வாய்க்கிழமை காலையில் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குப் புறப்பட்டாா். ஸ்ரீபெரும்புதூா் சின்னக்கடை தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனம் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT