காஞ்சிபுரம்

தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்க லாபத்தொகை ரூ.10.74 லட்சம் வழங்கல்

DIN

தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் லாப பிரிவினைத் தொகை ரூ.10.74 லட்சம் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் அகோ.சந்திரசேகரிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு வளா்ச்சி நிதி ரூ.6.44,934 மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ.4.29,956 உட்பட மொத்தம் ரூ.10,74,890-க்கான காசோலையை தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு சங்கத்தின் தலைவா் பி.தேவராஜன் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் அகோ.சந்திரசேகரிடம் வழங்கினாா். இத்தொகை தென்மேல்பாக்கம் நகா் கூட்டுறவு சங்கத்தின் கடந்த 2018-2019 ஆம் ஆண்டுக்கான லாபப் பிரிவினையிலிருந்து வழங்கப்பட்டது.

அப்போது மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநா் சி.சத்தியநாராயணன், சங்க உதவி செயலா் எஸ்.சிகாமணி ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT