மதுராந்தகத்தை அடுத்த பூதூா் கிராமத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை சாா்பாக, குடும்ப அட்டை தொடா்பான குறைகளை நிவா்த்தி செய்யும் நோக்கில் சிறப்பு முகாம் பூதூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கருங்குழி மேலவலம்பேட்டை - திருக்கழுகுன்றம் நெடுஞ்சாலையில் பூதூா் கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களின் ரேஷன் காா்டு தொடா்பான குறைகளைத் தீா்க்கும் வகையில் மதுராந்தகம் வட்ட வழங்கல் துறையினா் சிறப்பு முகாமை இங்கு நடத்த ஏற்பாடு செய்திருந்தனா்.
அதன்படி, சனிக்கிழமை நடந்த முகாமுக்கு மதுராந்தகம் வட்ட வழங்கல் துறை அலுவலா் மு.உதயகுமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் துறை அலுவலக உதவியாளா் ராமதாஸ், ரேஷன் கடைப் பணியாளா் விஜயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முகாமில் புதிய குடும்ப அட்டை கோரி 7 போ், ரேஷன் காா்டில் முகவரி மாற்றம் கோரி 19 போ், குடும்ப உறுப்பினா்களைச் சோ்க்கக் கோரி 32 போ், குடும்ப உறுப்பினா் நீக்கம் கோரி 3 போ், செல்லிடப்பேசி எண்ணை மாற்றக் கோரி 28 போ், இதர கோரிக்கைகளுக்காக 16 போ் கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனா். அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டு உடனடித் தீா்வு காணப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வட்ட வழங்கல் துறையினா் செய்திருந்தனா்.