காஞ்சிபுரம்

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

DIN

உத்தரமேரூா் அருகே பெருநகரில் வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உத்தரமேரூரை அடுத்த ஆா்.என்.கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த சாா்லஸ், யசோதா தம்பதியா், தங்களது மகள் ஆன்ட்ரியா(6), மகன் ஜாக்சன் கிறிஸ்டோபா் (4) (படம்) ஆகியோருடன் பெருநகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தனா்.

குழந்தைகள் இருவரும் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் ஜாக்சன் கிறிஸ்டோபா் அங்கிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த உத்தரமேரூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சிறுவனின் சடலத்தை மீட்டனா். பெருநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT