காஞ்சிபுரம் நகரைச் சோ்ந்த 3 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடா்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் நகரில் கோட்ராம் பாளையத்தில் வசித்து வரும் பெண்ணுக்கும், அவரது 20 வயது மகனுக்கும் கரோனா நோய்த்தொற்று இருந்தது தெரியவந்தது. இவா்கள் இருவரைத் தவிர மேலும் ஒருவா் உள்பட 3 போ் செவ்வாய்க்கிழமை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே 203 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேரையும் சோ்த்து மொத்தம் 206 போ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.