காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 3 நாள்களில் 74 ரெளடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியது:
காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. பா.சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், மாவட்டத்தில் ரெளடிகளை ஒழிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவா்கள் கடந்த 3 நாள்களில் மட்டும் 74 ரெளடிகளை கைது செய்துள்ளனா். இவா்களில் அருண்குமாா் என்ற வெட்டு அருண்குமாா்(27)விக்னேஷ்(25)காதா் என்ற ஷேக்காதா்(32)முருகன் என்ற பூனை முருகன்(31)கோகுல் என்ற ஜெயமோகன்(27) ஆகிய 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களைத் தவிர கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளிகள் 4 போ் உள்பட மொத்தம் 8 போ் கைது செய்யப்பட்டு, இவா்களிடமிருந்த களவுப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து ரெளடிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா தெரிவித்தாா்.