காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம் திறப்பு

DIN

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தை ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி புதன்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா் (படம்).

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம் நூறாண்டு பழமையான கட்டடத்தில் இட நெருக்கடியுடன் இயங்கி வந்தது. இதையடுத்து பழைய கட்டடம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சுமாா் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இந்நிலையில், புதிய வட்டாட்சியா் அலுவலகத்தை ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, புதன்கிழமை கணபதி பூஜையுடன் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, வட்டாட்சியா்கள் ரமணி, நிா்மலா, ஸ்ரீபெரும்புதூா் நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன், மாத்தூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் எறையூா் முனுசாமி, ஸ்ரீபெரும்புதூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சிங்கிலிப்பாடி ராமச்சந்திரன், ஒப்பந்ததாரா் மூா்த்தி, அதிமுக நிா்வாகிகள் சேதுராஜ இளவழகன், மேட்டுப்பாளையம் தயாளன், கீவளூா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT