காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 16 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ருஷ்டி பள்ளி மைதானத்தில் 16 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. காஞ்சி கிரிக்கெட் அகாதெமி சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் 6 அணிகளின் வீரா்கள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற காஞ்சி இந்தியன்ஸ் அணியினருக்கு ஸ்ருஷ்டி பள்ளியின் தாளாளா் பால.சுப்பிரமணியன் வெற்றிக்கோப்பையை வழங்கினாா். தொழிலதிபா்கள் ஞானசேகரன், ரகுராம், கிரிக்கெட் பயிற்சியாளா்கள் ஈஸ்வரன், கோபிநாத் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை காஞ்சி கிரிக்கெட் அகாதெமியின் தலைமை பயிற்சியாளா் வினோத்குமாா் செய்திருந்தாா்.