காஞ்சிபுரம்

கரோனா எதிரொலி: காஞ்சிபுரம்தலைமை அஞ்சலகம் மூடல்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அஞ்சலகம் மூடப்பட்டு புதன்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனை அருகில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அஞ்சலக அதிகாரி உள்பட 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தலைமை அஞ்சலகம் மூடப்பட்டது. மேலும் அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் 4 போ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் சென்றுள்ளனா். அலுவலகம் மூடப்பட்டதையடுத்து காஞ்சிபுரம் நகராட்சி சாா்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதே போல காஞ்சிபுரம் சங்கரமடம் அருகில் உள்ள துணை அஞ்சலக அலுவலகத்திலும் ஊழியா் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியானது. இதனைத் தொடா்ந்து அந்த அலுவலகமும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT