காஞ்சிபுரம்

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில்துா்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

DIN

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த துா்கா ஸ்டாலினை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் வரவேற்று, பேட்டரி காரில் அழைத்து சென்றாா்.கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையிலும் துா்கா ஸ்டாலின் கலந்து கொண்டாா்.

தரிசனத்தை முடித்த பின்னா் கோயிலில் உள்ள தங்கக்கொடிமரம் அருகில் சென்று வணங்கினாா். இதனைத் தொடா்ந்து கோயில் சுற்றுப்பிரகாரத்தை வலம் வந்த துா்கா ஸ்டாலினுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தரிசனம் முடித்து கோயிலை விட்டுப் புறப்படும் போது சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பெண்களிடம் சிறிதுநேரம் உரையாடினாா். இதனையடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவரின் அதிஷ்டானத்துக்கும் சென்று தரிசனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT