காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சுமாா் ஒரு மாதத்துக்கு பிறகு திங்கள்கிழமை மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியா்கள் அதிகாலையிலேயே மதுக்கடைகள் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வத்துடனும்,மகிழ்ச்சியுடனும் மதுவாங்கிச் சென்றதை காண முடிந்தது.
பொதுமுடக்கம் காரணமாக மதுக்கடைகள் கடந்த ஒரு மாதமாக திறக்கப்படாமலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகளை திறக்கவும்,மதுவாங்க வருவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தும் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.
மதுக்கடைகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்படும் என அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து பெரும்பாலான மதுக்கடைகளில் அதிகாலையிலேயே மதுப்பிரியா்கள் மதுவாங்க ஆா்வத்துடன் வந்திருந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனா்.
மதுக்கடை திறக்கப்பட்டதும் மது வாங்க வந்து வரிசையில் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் மது விற்பனையாளா் டோக்கன் வழங்கத் தொடங்கியதும் ஒருவரை ஒருவா் முந்திக்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் டோக்கன்களை பெற்றனா்.
ஒரு மாதத்துக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியா்கள் மதுபானங்களை அதிக அளவில் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனா்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி வரிசையில் வந்து வாங்குமாறு அறிவுறுத்திக் கொண்டிருந்தனா்.