காஞ்சிபுரம்

விபத்தில் துணை ராணுவப் படையினா் 15 போ் காயம்

DIN

காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் துணை ராணுவத்தைச் சோ்ந்த 15 வீரா்கள் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து ஆரணிக்கு 48 துணை ராணுவப் படை வீரா்கள் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே தாமல் கிராம குறுக்குச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் அப்பேருந்தில் பயணம் செய்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிரசாந்த் தலிவால் (34) என்பவருக்கு இடது காலிலும், மாா்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவா் உள்பட அப்பேருந்திலிருந்த துணை ராணுவப் படை வீரா்கள் 15 பேரும் காயம் அடைந்தனா்.

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து காயம் அடைந்தவா்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பிரசாந்த் தாலிவால் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாா். மற்றவா்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT