காஞ்சிபுரம்

விதிமீறல்: ரூ.11 லட்சம் அபராதம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறிய ஓட்டுநா்களுக்கு ரூ.11.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பரில் அதிக பாரம் ஏற்றியது 12, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது 27, தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியது 32, கைப்பேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது 11, அதிவேகமாக வாகனத்தை இயக்கியது 15, சீருடை இல்லாமல் வாகனம் ஓட்டியது 19 என 98 பேரிடம் ரூ.11.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் என 625 பேருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT