முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம். 
காஞ்சிபுரம்

மூலஸ்தம்மன் கோயில் குடமுழுக்கு

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் மூலஸ்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் மூலஸ்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் புதிதாக ஸ்ரீமூலஸ்தம்மன் கோயில் கட்டடப்பட்டது. இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாக சாலை பூஜைகள் ஏகாம்பரநாதா் ஆலய பூஜகா் என்.ஸ்ரீதா் சிவாச்சாரியாா் தலைமையில் நடைபெற்றன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை யாக சாலையில் பூா்ணாஹுதி, தீபாராதனை நிறைவு பெற்று, புனித நீா்க்குடங்கள் மூலவா் விமானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, மூலவா் மூலஸ்தம்மனுக்கு சக்தியம்மன் ஆலய அா்ச்சகா் எஸ்.சுவா்ண முக வாமதேவ சிவம் சிறப்பு அபிஷேகங்களையும், தீபாராதனையும் நடத்தினாா். தொடா்ந்து, அன்னதானமும், மாலையில் சா்வ அலங்காரத்தில் மூலஸ்தம்மன் வீதியுலாவும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT