காஞ்சிபுரம்

மின்தகன மயானம் அமைக்க ரூ. 5 லட்சம் நன்கொடை

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாகலூத்து மேடு பகுதியில் மின்தகன மயானம் அமைக்க தனியாா் பட்டுச்சேலை விற்பனை நிறுவனம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியது.

காஞ்சிபுரம் மாநகராட்சிப் பகுதியான நாகலூத்து மேடு பகுதியில் மின்தகன மயானம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு பொதுமக்களும் பங்களிப்புத் தொகை வழங்கலாம் என மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொதுமக்கள் நிதி வழங்கி வருகின்றனா். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள செங்கல்வராயன் பட்டுச் சேலை விற்பனை நிறுவன உரிமையாளா் சோமசுந்தரம் தனது பங்களிப்பாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், பொறியாளா் கணேசன், மாநகராட்சி மன்ற உறுப்பினா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT