முகப்பு
காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரி  முழு கொள்ளளவை எட்டியது

நேற்று பெய்த மழை காரணமாக, கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரி  முழு கொள்ளளவை எட்டியது.

Updated On : 20 ஜூன், 2022 at 11:25 AM
செம்பரம்பாக்கம் ஏரி
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:04 PM

காஞ்சிபுரம்: நேற்று பெய்த மழை காரணமாக, கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரி  முழு கொள்ளளவை எட்டியது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக ,கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்மட்டம் உயரம் 24 அடியில், 23.36 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில், 3,475 மில்லியன் கன அடியாகவும், நேற்று இரவு பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் காரணமாக வினாடிக்கு 1700 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement

தற்போது ஏரி முழு கொள்ளளவை நோக்கி சென்று கொண்டிருப்பதால் ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதி நீர நிறுத்துப்படுமா அல்லது உபரி நீர்  வெளியேற்றலாமா என பொதுப்பணித்துறை அதிகாரிகள்  ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் ஏரியின் நீர்  மட்ட உயரத்தை 23.50 அடியில் வைத்து கண்காணிக்க பொது பணித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.