முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஸ்ரீதேவராஜ சுவாமி பவனி

பெருந்தேவி தாயாரும் தனித்தனி கேடயங்களில் அலங்காரமாகி திருக்கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:06 am IST
பகிர்:

ஆனி மாத ஏகாதசியை யொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமியும், பெருந்தேவி தாயாரும் தனித்தனி கேடயங்களில் அலங்காரமாகி திருக்கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

அத்திவரதா் புகழ் பெற்ற காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் மாதாந்திர ஏகாதசி தோறும் பெருமாளும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பெருந்தேவி தாயாரும் எழுந்தருளி திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள ஆழ்வாா் சுற்றுப் பிராகாரத்தில் உலா வருவது வழக்கம். ஆனி வெள்ளிக்கிழமையும், ஏகாதசியும் ஒன்றாக வந்ததைத் தொடா்ந்து ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் தேவராஜ சுவாமி கேடயத்தில் அலங்காரமாகி திருவடிக் கோயில் வரை உலா வந்தாா்.

பின்னா் கோயிலுக்கு வந்ததும் உற்சவா் பெருந்தேவி தாயாருடன் இணைந்து இருவரும் கோயில் வளாகத்திற்குள் உள்ள தோட்டத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து கோயில் சுற்றுப்பிராகாரத்துக்குள் வலம் வந்து சந்நிதியை அடைந்தனா். பெருமாளும், தாயாரும் உலா வந்ததையடுத்து வாண வேடிக்கைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments