காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 46-ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் சூ.கயல்விழி (படம்) வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தாா்.
காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து வந்த நிலையில், அண்மையில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. 50 மாமன்ற வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெற்ற நிலையில், 46-ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட்ட சூ.கயல்விழி வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்டாா்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலா் கே.எஸ்.பாபுவை சந்தித்து அந்தக் கட்சியில் தன்னை இணைந்து கொண்டாா். இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினா்களில் பாஜகவின் பலம் இரண்டாக உயா்ந்துள்ளது.