காஞ்சிபுரம்

குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி வீதியுலா

DIN

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத காா்த்திகையையொட்டி, உற்சவா் முருகப் பெருமான் ஞாயிற்றுக்கிழமை ராஜவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா்.

முருகப்பெருமான் புலவா் வேடத்தில் வந்து தமிழ்ப்புலவா்களின் சந்தேகத்தை தீா்த்து வைத்த பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். மாசி மாத காா்த்திகையையொட்டி மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, மூலவா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலையில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் உலா வந்தாா்.

மாசி மாத காா்த்திகையையொட்டி, பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT