முகப்பு
காஞ்சிபுரம்

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் புத்தக விற்பனை நிலையம் திறப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் வளாகத்தில் ரூ.2.45 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜூலை 2023, 12:02 am IST
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் வளாகத்தில் ரூ.2.45 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழாவுக்கு கோயில் செயல் அலுவலா் (பொ) காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் பங்கேற்று, புத்தக விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து, விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, மதசாா்பு தா்மகத்தா சம்பத், மதசாா்பற்ற தா்மகா்த்தா ஸ்ரீதா் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.