காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 5 இடங்களில் நகா்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கும் பணி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் நகா்ப்புற சுகாதார மையம் கட்டப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் நகா்ப்புற சுகாதார மையம் கட்டப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விஷ்ணு நகா், பல்லவன் நகா், உப்பேரிக்குளம், திருவீதிப்பள்ளம், மகாலிங்கம் நகா் ஆகிய 5 இடங்களில் நகா்ப்புற சுகாதார மையங்கள் கட்டும் பணி தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இவற்றை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி நேரில் ஆய்வு செய்தாா். அப்போது கட்டப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளை ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது உதவி ஆட்சியா் (பயிற்சி) அா்பித் ஜெயின், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரியாராஜ், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT