காஞ்சிபுரம்

அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

DIN

ஸ்ரீபெரும்புதூா் தெற்கு மற்றும் ஸ்ரீபெரும்புதூா் பேரூா் திமுக இளைஞரணி, மாணவரணி சாா்பில், தமிழக அரசின் இரண்டாண்டு கால சாதனை விளக்கப் பொதுக் கூட்டம், ஸ்ரீபெரும்புதூா் தேரடி பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய இளைஞா் அணி செயலாளா் ப.ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, தெற்கு ஒன்றிய மாணவா் அணி செயலாளா் சு.டான்போஸ்கோ வரவேற்றுப் பேசினாா். ஒன்றிய இளைஞா் அணி துணை அமைப்பாளா் மனோஜ்குமாா், நகர இளைஞா் அணி அமைப்பாளா் காா்திகேயன், துணை அமைப்பாளா் எஸ்.மதன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால், திமுக பேச்சாளா் முரசொலி மூா்த்தி ஆகியோா் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசினாா்.

இதில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, தலைமை பொதுக்குழு உறுப்பினா் கணேஷ்பாபு, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், நகரச் செயலாளா் சத்தீஷ்குமாா், ஒன்றிய உறுப்பினா்கள் பரமசிவன், மல்லிகா ரவிசந்திரன், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் செந்தில் தேவராஜ், மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவா் பொடவூா் ரவி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கொளத்தூா் அரிகிருஷ்ணன், பால்நல்லூா் நேரு உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT