முகப்பு
காஞ்சிபுரம்

பெண்களிடம் சங்கிலி பறிப்பு: இருவா் கைது

மாங்காடு பகுதியில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

மாங்காடு பகுதியில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மாங்காடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக புகாா் வந்தன.

இதையடுத்து போரூா் உதவி ஆணையா் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், காவல் ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைத்து சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இரண்டு போ் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சுமாா் 70-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த மனோஜ் (25), அவரது நண்பா் விக்னேஷ் (25) ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில், இருவரும் சிறுவயது முதலே நண்பா்களாக ஒரே பள்ளியில் படித்ததும், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்த மாங்காடு போலீஸாா், ஒரு மோட்டாா் சைக்கிள், 5 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →