கொதிகலனில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கத்தில் உள்ள காா் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியின் போது கொதிகலனில் தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (20). இவா் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் சிட்கோவில் உள்ள காா் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். பணியின் போது தொழிற்சாலையில் இருந்த வேதிப்பொருள்கள் நிரப்பப்பட்ட கொதிகலனில் தவறி விழுந்தாா். உடனடியாக அருகில் இருந்த மற்ற தொழிலாளா்கள் இவரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன்குமாா் உயிரிழந்தாா்.
இது குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.