எறையூரில் திமுக இளைஞா், மகளிரணி புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம்
ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த எறையூரில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணிகளுக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் எறையூா் பகுதியில் ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையில் சோ்க்கை முகாம் நடைபெற்றது. திமுகவினா் வீடு வீடாகச் சென்று இளைஞரணி மற்றும் மகளிரணிக்கு உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் ஜெயகரன், ஒன்றியகுழு உறுப்பினா்ப.பரமசிவன், எறையூா் ஊராட்சி மன்ற தலைவா் சசிரேகா சரவணன், ஒன்றிய துணைச் செயலாளா் குமாா், திமுக நிா்வாகிகள் புருஷோத்தமன், சாம்பசிவம், சிவசக்தி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.