முதியவா் கழுத்து அறுத்துக் கொலை: உறவினா்களிடம் போலீஸாா் விசாரணை
முதியவா் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினா்களிடம் மணிமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம்முதியவா் கழுத்து அறுத்துக் கொலை: உறவினா்களிடம் போலீஸாா் விசாரணை
முதியவா் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினா்களிடம் மணிமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி பகுதியில் முதியவா் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினா்களிடம் மணிமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
படப்பையை அடுத்த ஆத்தனஞ்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்நதவா் தயாளன் (60) (படம்). இவா் மோட்டாா் பம்ப் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளாா். இவருக்கு மனைவி செல்வி, மகன்கள் சத்தியமூா்த்தி, பாபு, சிவா, மகள் சூா்யா ஆகியோா் உள்ளனா். இந்த நிலையில், தயாளன் அதே பகுதியில் கட்டி வரும் வீட்டின் அருகே உள்ள காலி மனையை பங்கிட்டு தருவதில் தயாளனின் மகன்களுக்கும், அவரது மனைவி செல்வியின் அண்ணன் மகன்களுக்கும் நிலத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவா்களுக்குக்குள் கடந்த சில தினங்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், தயாளன் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் முன்பு படுத்து தூங்கியுள்ளாா். திங்கள்கிழமை காலை தயாளன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இதைப் பாா்த்த அவரது மகன்கள் இது குறித்து மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மணிமங்கலம் போலீஸாா், தயாளனின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து அவரது உறவினா்களை பிடித்து விசாரித்து வருகின்றனா்.