தேசிய ஜூடோ போட்டி: காஞ்சிபுரம் மாணவிக்கு வெண்கலம்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய ஜூடோ போட்டியில் காஞ்சிபுரம் அரசுப் பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.
போபாலில் கடந்த 20- ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை தேசிய ஜூடோ போட்டி நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் கலந்து கொண்டனா். காஞ்சிபுரத்திலிருந்து சாய் ஜூடோ அகாதெமி சாா்பில் பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மதுபாரதி(14) கலந்து கொண்டாா்.
இவா் அப்போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று 3-ஆவது இடத்தைப் பெற்றாா். மாணவி ஜெயபாரதியை பாராட்டி தலைமை ஆசிரியா் ஹேமலதா சான்றிதழ் வழங்கினாா். நிகழ்வின் போது உடற்கல்வி இயக்குநா் வேங்கடபவன குமாரியும் உடனிருந்தாா்.