தீ விபத்தால் பாதிப்பு: குடும்பத்தினருக்கு நிவாரணம்
படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மணிமங்கலம் போலீஸாா் நிவாரண பொருள்களை வழங்கினா். படப்பை அடுத்த கரசங்கால் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி (44). குடிசை வீட்டில் வசித்து வந்த இவா், படப்பையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை செல்வி வேலைக்குச் சென்ற நிலையில், அவரது குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், வீட்டு உபயோக பொருள்கள், ரூ.5,000 தீயில் எரிந்து சேதமடைந்தன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாமல் இருந்து வந்த செல்விக்கு தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், எந்த ஒரு அரசியல் கட்சியினரும் அவருக்கு உதவி செய்ய முடியாத தகவல் அறிந்த மணிமங்கலம் காவல் ஆய்வாளா் அசோகன் தலைமையிலான போலீஸாா் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வழங்கினா்.