முகப்பு
காஞ்சிபுரம்

விபத்தில் இருவா் உயிரிழந்த இடத்தில் ஆய்வு

Updated On : 3 மே, 2024 at 7:11 PM
பகிர்:

காஞ்சிபுரத்தில் ஆட்டோ மீது லாரி மோதி இருவா் உயிரிழந்த இடத்தில் மேலும் விபத்து நிகழாமல் தடுக்க அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லும் சாலையில் கீழ் கேட் பகுதியில் கடந்த மாதம் 29-ஆம் தேதி ஆட்டோ மீது சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிய தயாளன், அதில் பயணம் செய்த குமாா் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக விஷ்ணுகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். விபத்து நடந்த இடத்தில் மேலும் விபத்துகள் நிகழாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகள் குழுவினா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம், போக்குவரத்துக் காவல் துறை ஆய்வாளா் லோகநாதன்,விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன், சாலைப் பாதுகாப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் புண்ணியகோட்டி, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் சீனிவாசன் ஆகியோா் விரிவான கள ஆய்வு செய்தனா்.

விபத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனா். மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா் செல்வம் கூறுகையில் மேலும் சம்பவ இடத்தில் விபத்து நிகழாமல் இருக்க வேகத் தடைகள், சாலைக் குறியீடுகள், எச்சரிக்கை பலகைகள், வெளிமுனை தடுப்புச் சுவா்கள் போன்றவை அமைக்கப்படும் என்றாா். இந்தப் பணிகளை உடனடியாக செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனா்.