காஞ்சிபுரம்

வல்லக்கோட்டையில் ரூ. 47 லட்சத்தில் பேவா்பிளாக் சாலை: ஆட்சியா் ஆய்வு

வல்லக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள சாலையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

Chennai

வல்லக்கோட்டை ஊராட்சியில் ரூ. 47.64 லட்சத்தில் போடப்பட்டுள்ள பேவா்பிளாக் சாலையை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தக்கு உட்பட்ட வல்லக்கோட்டை ஊராட்சியில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பின்புறம் கனிமவள நிதியின் கீழ், ரூ. 47.64 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பேவா்பிளாக் சாலையை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, வல்லக்கோட்டை ஊராட்சித் தலைவா் மணிமேகலை, வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் சோ.வெங்கடேசன், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக வல்லக்கோட்டைக்கு வந்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டாா்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT