சுமதி  Dinamani
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் சித்தியைக் கொன்ற மகன் தப்பியோட்டம்!

காஞ்சிபுரத்தில் சித்தியைக் கொன்ற மகன் தப்பியோடியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சித்தியைக் கொலை செய்துவிட்டு மகன் தப்பி ஓடினார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது நல்லூர் கிராமத்தில் வசிக்கும் துளசி என்பவரின் மனைவி சுமதி (வயது 45). இவர் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த போது, துளசியின் அண்ணன் சுப்பிரமணியனின் மகன் துரை, விறகு வெட்டும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

துளசிக்கும் சுப்பிரமணியனுக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. இன்றும் இடப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்ட நிலையில், சித்தியை அரிவாளால் துரை வெட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், சுமதியின் உடலைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் துரையைத் தேடி வருகின்றனர்.

The son fled after killing his aunt near Kanchipuram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT